துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் நகர செயலாளர் அமைதிப்பாலு தலைமையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள்(செப்-15)விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மு பரஞ்ஜோதி கலந்து கொண்டு துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன், பேரவை துணை செயலாளர் தீனதயாளன் (நகர்மன்ற உறுப்பினர்), ஒன்றிய செயலாளர்கள் பொன் காமராஜ், வெங்கடேசன்,ராம் மோகன், பேரூர் கழக செயலாளர்கள் ராஜாங்கம், ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி மருதமுத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் கவிதை மணி,முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மைவிழி, மனோகரன் ,வர்த்தக அணி ராயல் பாஸ்கர், எஸ்கேபி ஸ்ரீதர், வழக்கறிஞர்கள் கார்த்திகேயன்,செந்தில்குமார், நகர இளைஞர் அணி செயலாளர் விவேக்,அம்மா பேரவை ராமஜெயம், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் வடிவேலு, நகை கடை பாஸ்கர், கண்ணதாசன், கீதா‌ வைத்தியநாதன் , கவுன்சிலர் சந்திரா, கிளை செயலாளர்கள் டாஸ்மாக் ராமு, சங்கர்,அருணாசலம், ரவிக்குமார் ,விவசாய அணி மாவட்ட துணை செயலாளர் விஜயரங்கன், சின்னசாமி,சிலோன் ஆபீஸ் மகேந்திரன் மற்றும் மகளிர் அணி ரெங்கநாதபுரம் பத்மாவதி, அபி இளங்கோ,பிரதிநிதி முத்துக்குமாரலிங்கம் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *