இனாம் சமயபுரம் ஊராட்சியில் ஆண்டுதோறும் செப். 17 முதல் அக். 2-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை – மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது குறித்தும், சுகாதாரம், திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கங்காதாரிணி மற்றும் அரசு அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
மண்ணை
க. மாரிமுத்து.