பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்….

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க நிகழ்ச்சி கட்சி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆலோசனைப்படி தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க நிகழ்ச்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் அலி தலைமையில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி முன்னிலையிலும் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட , ஒன்றிய, நகர நிர்வாகிகளும் ,சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை வசதியை பாபநாசம் , அய்யம்பேட்டையில்,
கபிஸ்தலம், அம்மாப்பேட்டை,சாலியமங்கலம், மெலட்டூர்,ஆகிய சரக பகுதிகளில் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் .
விபத்து மற்றும் அவசர காலங்களில் பொது மருத்துவம் ,மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் , முதியோர் நல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சேவைகளுக்கு 24 மணி நேரமும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *