பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரையில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்து-போலீசார் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வாழ்க்கை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று கரையில் கூட்டு குடிநீர் திட்ட தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சுவர் அமைக்கும் பணிக்கு தேவையான சிமெண்ட் கலவையை தஞ்சாவூரில் இருந்து வாழ்க்கை கிராமத்தின் வழியாக கொள்ளிடம் ஆற்றுக் கரையில் கலவை இயந்திர லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கரையோரம் இருந்த வயலில் கவிழ்ந்து விழுந்தது.
இதில் லாரி ஓட்டுநர் ஆரோக்கியராஜ் பலத்த அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வயலில் கவிழ்ந்த சிமெண்ட் கலவை லாரியை ராட்சச கிரேன் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து மீட்கப்பட்டது.

இது குறித்து கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *