திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் இன்று உலக இதய தினத்தையொட்டி இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் மலர் சாதிக் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மஹாவீர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர். டாக்டர் ஜெ.வெங்கடேசன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகளையும், தேவையில்லாத மனக் கவலைகளை மனதில் சேர்க்க வேண்டாம் என்றும், ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இன்றைய சூழலில் சிறிய வயதிலேயே ஹார்ட் அட்டாக் வரும் சூழலில் அனைவரும் உடல் நலமும் மன நலமும் பெற்று திகழ வேண்டும் எனவும், தினசரி உடற்பயிற்சி அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

உலக இதய தின கவிதை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் ஆதிநாதன், முகமது ஜியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *