திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்களுக்கு திருவாரூர் கூடுதல் ஆட்சியரின் (வளர்ச்சி) ஆய்வு கூட்ட அறிவுரையின்படி ஆய்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முரளி தலைமையில் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார், ஒன்றிய அலுவலக கணினி உதவியாளர் கார்த்திகேயன் e KYC எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர். ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *