மதுரையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டம் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை செனாய் நகரில் அமைந்துள்ள சேவாலயம் மாணவர்கள் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஐம்பத்து மூன்று மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் ஒத்தகடை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன், கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில் குமார், மக்கள் தொண்டன் அசோக் குமார், சமூக ஆர்வலர் சேக் மஸ்தான், ஜெயபாலன், ரோட்டரி கிளப் ஆஃப் பிளாசம் தலைவர் ஷர்மிளா மாதவன், செல்வி கல்பனா, ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *