போடிநாயக்கனூர் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேலத்தெரு பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு பள்ளிவாசல் வெளியே வந்த இஸ்லாமியர்கள் மற்றும் ஜமாத் கமிட்டி உறுப்பினர்களிடம் எதிர்வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய எனக்கு ஆதரவு தாருங்கள் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
போடி திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஒ. பன்னீர்செல்வம் இந்த நிகழ்வில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர், தங்கதமிழ்செல்வன் எம்பி போடி மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் போடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்..லட்சுமணன் ,போடி நகர் திமுக செயலாளர், ஆர் புருஷோத்தமன், போடி நகர்மன்ற முன்னாள் நகரத் தந்தை வி ஆர்.பழனிராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆஜிப்கான் உள்ளிட்ட போடி நகர் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்