திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆணையாளர் திரு எஸ் .செல்வ பாலாஜி அவர்கள் கூறியதாவது இனி உணவகம் மற்றும் தங்கும் விடுதி, திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மாநகராட்சி மூலம் சேகரிக்க முடியாது. அதனை உரிமையாளர்களே தங்களது சொந்த செலவில் உரமாக்க வேண்டும் அல்லது பயோ கேஸ் மூலம் மறுசுழற்சி செய்ய வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆகவே திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் 3 மாதங்களுக்குள் இது நடைமுறை ப்படுத்தப்படும் என கலந்தாய்வு கூட்டத்தில் ஆணையாளர் திரு எஸ். செல்வ பாலாஜி தகவல் .
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.