புதுச்சேரி அரசு சார்பில் அமரர் தியாகி அன்சாரி பி. துரைசாமி அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

அன்னாரது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் மகாத்மா காந்தி சாலை மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சந்திப்பில், ஹோட்டல் அதிதி அருகில் அமைந்துள்ள அன்னாரது சிலை சதுக்கத்தில் அமரர் தியாகி அன்சாரி பி. துரைசாமி அவர்களின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ராஜவேல் அமைச்சர் சிவகோவிந்து , சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் சட்டமன்ற உறுப்பினர் நாராயணசாமி , செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநர் முனைவர் குலசேகரன் , தியாகி அன்சாரி பி. துரைசாமி உறவினர்கள்,ஜெகத்ரட்சகன் ரங்கநாயகி மற்றும் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் தந்தைபிரியன் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.


விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தி மற்றும் விளம்பரத் துறை செய்திருந்தது.