புதுச்சேரி, ஜூலை 4: மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள், (03.07.2026) இரவு அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு வருகை புரிந்தார்.
அவரை புதுச்சேரி அரசின் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து வழங்கி, பொன்னாடை (சால்வை) அணிவித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது. நிகழ்வின்போது அரசு உயர் அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.