புதுச்சேரி, ஜூலை 4–
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, அரசு முறைப் பயணமாக (03.07.2026) இரவு புதுச்சேரிக்கு வருகை புரிந்தார்.
அவரை புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது.