ராமநாதபுரம் மாவட்டம், போக்குவரத்துக் கழகம் கமுதி கிளையின்கீழ் கமுதி பேருந்து நிலையத்திலிருந்து பாப்பாங்குளம், அரிசிக்குழுதான், செந்தனேந்தல், சீமனேந்தல், குண்டுகுளம், வண்ணாங்குளம், வேப்பங்குளம், பம்மனேந்தல், முஷ்டக்குறிச்சி, முதல்நாடு, கீழ்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு இயக்கப்பட்ட 1-ஆம் எண் பேருந்து சேதமடைந்த நிலையில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பொதுமக்கள் சார்பில் முதுகுளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், வனம், கதர் கிராமதொழில்கள் வாரிய அமைச்சருமான ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், திமுக மாவட்டச் செயலரும், ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரது முயற்சியில் பழைய பேருந்துக்குப் பதிலாக 1ஆம் நம்பர் புதிய பேருந்துஇயக்கப்பட்டது.
இந்தப் பேருந்தை கமுதி திமுக ஒன்றியச் செயலர் எஸ்.கே. சண்முகநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் பொதுமக்களுக்கும் , பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கமுதி போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் குமரவேல், தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச் செயலாளர் பச்சைமால், தொமுச பொருளாளர் ராஜேந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளர் துரைமுருகன், புதுக்கோட்டை முன்னாள் கிளைச் செயலர் வாட்டர் போர்டு முத்துராமலிங்கம், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.