வலங்கைமானில் உள்ளஐம்பெரும் சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோயில்களில்ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்றுசிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள
ஐம்பெரும் சிவாலயங்கள் ஏகாம்பரேஸ்வரர், கைலாசநாதர், வைத்தீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர்,காசிவிஸ்வநாதர் ஆகிய ஆலயத்திலும், வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் கோவில்,
செட்டித் தெரு வேம்படிமாரியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோயில் கள் உட்பட அனைத்து கோவில்களில் ஆடி மாதம் முதல் வெள்ளிகிழமையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.