பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் ரத்த தானம் தான் நடைபெற்றது இதில் சுமார் 35 பேர் ரத்ததானம் செய்தனர்

முகாமினை ரோட்டரி சங்கம் முன்னாள் துணை ஆளுநர் குமணன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் முன்னாள் தலைவர் விஜயகுமார் வரவேற்றார்.

தலைவர் சுரேஷ்குமார் முன்னுரை ஆற்றினார் காவல்துறை துணை ஆய்வாளர் சுமதி, தலைமைக் காவலர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

முன்னாள் தலைவர்கள் அன்புராஜ், செந்தில்வேல் , கிருபாநிதி, ஜெயராமன், ஆகியோருடன் பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்கள் சுரேஷ்குமார்,
சுப்பிரமணியன், ராஜேந்திரன், ஸ்டுடியோ கார்த்திகேயன், உடையார்பாளையம் சரவணன், முனைவர் அடிகள் சிவபெருமான், பணிநிறைவு தலைமையாசிரியர் அரங்கநாதன், சிவராமகிருஷ்ணன், மெடிக்கல் விஜயகுமார்
மேல்நிலைப்பள்ளிஉதவித் தலைமை ஆசிரியர் இளங்கோவன், காவல்துறை உதவி ஆய்வாளர் சுமதி , தலைமைக் காவலர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அரியலூர் அரசினர் இரத்த வங்கி மருத்துவர் திருமதி கண்மணி தலைமையில் செவிலியர்கள் உட்பட மருத்துவக் குழுவினர் ஆறு பேர் இரத்த தானம் முகாமில் கலந்துகொண்டு 35 குருதிக்‌ கொடையாளர்களிடம் இரத்தம் சேகரித்தார்கள் இவை அரியலூர் மருத்துவத்துறை இரத்த வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டது குருதிக்‌கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

இன்றைய முகாம் திட்டத் தலைவர் பொறியாளர் அன்புராஜ் அவர்களும் ஒருங்கிணைப்பாளராக அனந்த பத்மநாபன் அவர்களும் சிறப்பாக செயற்பட்டார்கள் முகாமின்
இறுதியில் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *