பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன் துவக்கி வைத்தார்
இதில் இடையக்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023- 2024 கீழ் ரூ 38.40 லட்சம் மதிப்பீட்டில் காட்டாத்தூர் ஊராட்சியில் ரூ 34.84 லட்சம் மதிப்பீட்டிலும் புதுக்குடி ஊராட்சியில் 37.60 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அய்யூர் ஆதிதிராவிடர் காலனி இடையக்குறிச்சி ஊராட்சி இடையக்குறிச்சி இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,கொடுக்கூர் ஊராட்சி கொடுக்கூர் காலனி தெருவில் சிமெண்ட்சாலை அமைக்கும் பணி மருதூர் ஊராட்சி, மருதூர் கீழப்பட்டி நிலாழி ஏரிக்கு செல்லும் பாதையில் வடிகால் வாய்க்கால் குவாகம் ஊராட்சி கீழக்குவாகம் பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை துவக்கி வைத்து எம்எல்ஏ
வல்லம் ஊராட்சி , காட்டாத்தூர், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்.
இதில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், ஆண்டிமடம் வேளாண்மை அட்மா குழு தலைவர் தருமதுரை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தனசேகரன், தன்ராஜ், சரோஜா காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாமி (இடையக்குறிச்சி), ராமலிங்கம் (அய்யூர்), சுகந்தி செல்வமணி (காட்டாத்தூர்), வைரம் அறிவழகன் (மேலூர்), ராஜேந்திரன் (புதுக்குடி) மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் ராணி, மாவட்ட பிரதிநிதி சிவமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சேகர்,பால்சாமி, துணை செயலாளர்கள் கென்னடி, செந்தில்குமார், அன்பழகி முத்துக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பாலா, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.