கோவை பிராணா யோகா மையம் சார்பாக நடைபெற்ற,
தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…

கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில், டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வு போட்டி சரவணம்பட்டி பிராணா யோகா மையத்தில் நடைபெற்றது. கோவை பிராணா யோகா மையத்தின் நிறுவனர்கள் ஜெயலட்சுமி,மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில்,ஆர்ட்டிஸ்டிக்,ரிதமிக்,அத்லெட்,உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆர்வமுடன் பலர் கலந்து கொண்டனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *