பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 240.லடசம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன் துவக்கி வைத்தார்.
இதில் இடையார் கிராமத்தில் ஆதிதிராவிடர் குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ருபாய் 31.34 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு சாலை மேம்பாடு பணிகள் மற்றும் வானதிரையன்பட்டினம், அங்கராயநல்லூர், தண்டலை, வடவீக்கம், படைநிலை, ஆலத்திப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் ரூபாய் சுமார் 240.00 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன் துவக்கி வைத்தார்.
இதில் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் (கிராம ஊராட்சி) , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, இளநிலை பொறியாளர் நடராஜன், மாவட்ட விவசாய அணி தலைவர் பி.ஆர்.கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன்
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், அழகானந்தம் ,உதவி பொறியாளர் குமார், இளநிலை பொறியாளர் செல்வராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஐயப்பன் (இடையார்) முருகன் (வானதிரையன்பட்டினம்) சாமிதுரை (அங்கராயநல்லூர்) ரேவதி சௌந்தர்ராஜன் (தண்டலை), குணசேகரன் (ஆலத்திப்பள்ளம்), ஒன்றிய அவைத்தலைவர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.