நாமக்கல் மாவட்டம்
பொன்னேரிபட்டி
ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்,நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச. உமா இடம் இன்று மனு ஒன்றை கொடுத்தனர்
விளையாட்டு மைதானத்தில் குறுக்கே கான்கரட் வீதி அமைப்பது சம்மந்தமாக. புகார் என்று அழைத்துள்ள அந்த மனுவை பாரதி ஜனதா கட்சி பிரமுகர் வள்ளிபுரம் வடிவேல் தலைமையில் அவர்கள் இந்த மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் வழங்கினர்
அந்த மனுவில் அவர்கள் காளிபாளையம் பஞ்சாயத்து பொன்னேரிபட்டி கிராமத்தில் நத்தம் பொரம்போக்கு சர்வே எண் : 220/13 என்னும் இடத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகம் உள்ளது.
இவ்விடத்தில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இப்பகுதி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் இம்மைதானத்தை விளையாடுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்
மற்றும் ஆண்டுதோறும் பொங்கல் மற்றும் தைபூசம் ஆகிய தினங்களில் ஊர் பொதுமக்கள் சார்பாக விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது
மேலும் மாலையில் மாணவர்கள் வாலி பால் விளையாடி வருகிறார்கள் ஆகையால் விளையாட்டு மைதானத்தில் குறுக்கே கான்கரட் சாலை அமைக்க வேண்டாம் என்றும் இவ்விடத்தில் தெருக்கள் இல்லாத காரணத்தினால் புதிதாக சாலை வசதி தேவை இல்லை என்றும் ஊர் பொதுமக்கல் சார்பாகவும் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்று அந்த மனுவில் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச. உமாவை கேட்டுக் கொண்டுள்ளார்