கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் விழுப்புரம், திருநெல்வேலி, மதுரை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்

இந்நிலையில் இவர்களுக்கு போதிய விடுதி வசதி இல்லாமல் வாடகைக்கு வீடுகளை எடுத்து பெரும் சிரமத்துடன் இருந்து வருவதாகவும் பாதிப்புக்குள்ளாகி வரும் வெளிமாவட்ட மற்றும் மாணவர்கள் நலன்கருதி கூடுதலாக ஒரு விடுதி வழங்க பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பாக பாஜகவின் இளைஞரணி மண்டல பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமையில் மண்டல பொதுச்செயலாளர் செந்தில் முருகன், கனகவல்லி, சி.ஏ.சுனில் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நகராட்சிக்கு சொந்தமான ஏதேனும் கட்டிடத்தை வழங்க வேண்டி நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோனிடம் மனு அளித்தனர்

இதேபோல பல்வேறு துறையினருக்கும் மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *