மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கோமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, முதன்மை கல்வி அலுவலர் அ.ரேணுகா, குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் உடன் இருந்தனர்.