ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கல்லிக்குடி ஊராட்சியில் .3 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் பலியபுரம் பகுதி, மேல தெருவில் பிளெவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுவருவதையும், .23 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கன்னூர் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி தடுப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுவருவதையும், ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் கல்லிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுவரும் கழிவறையினையும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கல்லிக்குடி பகுதியில் நியாயவிலைக் கடை அமைப்பதற்காக கட்டப்பட்டுவரும் கட்டடத்தினையும், 8 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் சமையலறைக்கான மேற்கூரை அமைக்கப்பட்டுவருவதையும், ஓடாச்சேரி ஊராட்சியில் .33 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் மங்களநாயகிபுரம் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுவருவதையும், 2 லட்சத்து 3 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் மங்களநாயகிபுரம் பகுதியிலுள்ள நூலகத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுபணிகளையும், .14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நியாயவிலைக்கடையினையும், .3 லட்சத்து 81 ஆயிரத்து 733 மதிப்பீட்டில் பெரிய வாய்க்காலில் படித்துறை மற்றும் குளியலறை அமைக்கப்பட்டுவருவதையும், 10 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பெரியார் சிலை சீரமைப்பு பணி நடைபெற்றுவருவதையும்,.30 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் சமத்துவபுரம் நுழைவாயில் அமைக்கப்பட்டுவருவதையும், ரூ.31 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுவருதையும்,.38 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் சமத்துவபுரம் குடிநீர் குழாய் விரிவாக்கம் பணிகள் நடைபெற்றுவருவதையும், 47 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுவருவதையும், ஆமுர் ஊராட்சியில் ரூ.10 லட்சத்து 8 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் மாதா கோவில் குளம் தூர்வாரப்பட்டுவருவதையும், 12 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நியாயவிலைக்கடையினையும், திருவாதிரைமங்கலம் ஊராட்சியில் 8 லட்;சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் வடவோடை மேலதெருவில் அமைக்கப்பட்டிருந்த சாலை வசதியினையும், 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சோழங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையலறை கட்டப்பட்டுவருவதையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டு பணியினை விரைந்து முடித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் .சங்கீதா, திருவாரூர் வட்டாட்சியர் .நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்; புவனேஸ்வரி, சுப்ரமணியன், உதவி செயற்பொறியாளர்; மோகன்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *