திருவள்ளூர்
சேலியம்பேடு ஊராட்சியில் உள்ள பத்ரகாளியம்மன் மற்றும் மங்கா வரத்தார் மற்றும் முனீஸ்வர சுவாமி ஆலயம் 10ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 250க்கு மேற்பட் டோர் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சேலியம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள சேயலி யம்பேடு மதுரா மேட்டுப்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த 58அடி உயரத்தில் அருள் மிகு ஸ்ரீபத்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீமங்காவரத்தார் மற்றும் முனீஸ்வரர் சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 10ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெ ற்றது.
இதனையடுத்து 250க்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டி விரதம் இருந்தனர். பின்னர் காப்பு கட்டி விரதம் இரு ந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சுற்று பகுதியை சேர்ந்த ஆயிரக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைசேலியம்பேடு மேட்டுப் பாளையம் கிராம சங்கர் சாமியார் செய்திருந்தார் இதில் சேலியம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா அருள் காட்டுக்குளம் ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.