எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
சீர்காழியில் 6 அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளியில் சீர்காழி, திருவெண்காடு, கோதண்டபுரம், ஆயங்குடிபள்ளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆறு அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள் 937 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி தலைமை வகித்தார். இதில் சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். திமுக நகர செயலாளர் சுப்பராயன், மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ,மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.