அலங்காநல்லூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை மாவட்டம். பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துவோம் அரசு பள்ளிகளை வளப்படுத்துவோம் என்ற தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கத்தில் மாநகராட்சி உள்ளாட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அவர்களின் பொறுப்பும்…

பங்கும் குறித்த புரிதலை உருவாக்கி பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் பயிற்சி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக அலங்காநல்லூர் ஒன்றியம் தாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இப்ப பயிற்சியில் அலங்காநல்லூர் பாலமேடு
மற்றும் பரவை பேரூராட்சிகளை சார்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் 45 பேர் கலந்து கொண்டனர். கருத்தாளர்களாக மாநில அளவில் நடைபெற்ற முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி சமுதாய அமைப்பாளர் பிச்சை, பிரபு, மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் காமராஜ், கருணாகரன், பயிற்சி அளித்தனர்.

பயிற்சியை பயிற்சி மதிப்பிற்குரிய மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளின் படி ப்பிற்குரிய மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, அவர்களின் சிறந்த ஆலோசனை படியும் பயிற்சியானது ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கள் உமா, செந்தில்வேல், குமரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ், ஆகிய துவக்கி வைத்தனர்.

பயிற்சியின் நோக்கமானது மறு கட்டமைப்பு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக மற்றும் வலுப்படுத்தும் விதமாக உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பாடும் முக்கியத்துவம் பெற்றதாக இருக்க வேண்டும் என்பது நோக்கமாகும். அரசு பள்ளிகளை வளப்படுத்தும் நோக்கத்துடன் அளிக்ககப்படும் பயிற்சியானது

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி உள்ளாட்சி பேரூராட்சி பிரதிநிதிகள் 322 உறுப்பினர்களுக்கு தொடர்ந்து அந்தந்த ஒன்றியங்களில் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் சுவாமிநாதன், பாலமேடு பேரூராட்சி துணைத் தலைவர் ராம்ராஜ், மற்றும் கவுன்சிலர்களும் பேரூராட்சிகளின் மகளிர் குழு அலுவலர் பிச்சை மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *