சோழவந்தான்
மதுரை மாவட்டம் வாடிப்பபட்டி வேளாண்மைதுறை சார்பில் மன்னாடிமங்கலம் கச்சகட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளூக்கு உணவு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பு கரீப் முன் பருவ குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
இம்முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர்.பாண்டி.வேளாண்மை துறையில் விவசாய கருவிகளுக்கு மானியம் குறித்து நுண்சத்து உயிர் உரங்கள் தேவைகள் பற்றி விளக்கி பேசினார்.உதவி பேராசிரியர் செல்வி சிறுதானியங்களில் புதிய ரகங்கள் சாகுபடி மற்றும் அதன் சத்துக்களால் ஏற்படும் நன்மைகள் பற்றி பேசினார்.
தொழில்நுட்ப உதவியாளர் வசந்தி விளைநிலங்களில் கோடை உழவு மண் பரிசோதனை மற்றும் சிறுதானிய விதை நேர்த்தி முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
வேளாண் அலுவலர்கள் சத்தியவாணி. பெருமாள் ஆகியோர் மாநில வேளாண், வளர்ச்சி திட்டங்கள் மூலம் செயல்படுத்தபடும் திட்டம் பற்றியும் சிறுதானிங்கள் தொழில் நுட்பங்கள் குறித்தும் விரிவாக பேசினார்கள்.
இதில் வேளாண்மை உதவி அலுவலர் விக்டோரியா செலஸ். தொழில்நுட்ப மேலாளர் பிரியா.உதலி மேலாளர் பூமிநாதன். அருணாதேவி மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.