பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசத்தில் அத்தனூர் அரியசெல்லம் திருக்கோவில்
ஆடி வெள்ளி குத்துவிளக்கு பூஜை…..

திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர்தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கஞ்சிமேடு அத்தனூர் அரியசெல்லம் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆறாம் ஆண்டு ஆடி வெள்ளி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது முன்னதாக சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடைப்பெற்றது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி பூ, குங்குமம் , பழங்கள் உள்ளிட்ட பொருள்களால் பூஜைகள் செய்து தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

திருவிளக்கு பூஜையில் பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அத்தனூர் அரியசெல்லம் அம்மனை தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *