வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 1057 குவிண்டால் பருத்தி ரூ. 78.66 லட்சத்தி
ற்கு ஏலம் போனது.
இடை த்தரகர்கள் இல்லாததால்விவசாயிகள் மகிழ்ச்சி.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நீடாமங்க லம் சாலையில் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி அருகேயுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைஒழுங்கு முறை விற்ப னை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடை பெறுகிறது.
இந்நிலை யில் நடப்பு பருவத்திற் கான பருத்தி மறைமுகஏலம் நேற்று முன்தினம்ஒழுங்கு முறை விற்ப னை கூட செயலாளர்ரமேஷ் (பொ) உத்திரவின் பேரில் நடை
பெற்றது. இந்த ஏலத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர்.
இதில் அதிக பட்ச மாக குவிண்டால் ரூ. 7,666,குறைந்த பட்சமாகரூ. 7,069 க்கும் சராசரி யாக குவிண்டால் ரூ.7,411க்கும் ஏலம் போனது.
இதில் 1057 குவிண்டால்பருத்தி ரூ. 78லட்சத்து66
ஆயிரத்திற்கு ஏலம் போனது. இடைத்தரகர் இல்லாததால் உரிய விலை கிடைப்பதாகவிவசாயிகள் மகிழ்ச்சி
தெரிவித்தனர். இது குறித்து ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளர்வீராசாமி தெரிவித்தா வது:
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைப்பெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியை நன்கு உலர்த்தி கொண்டு வர கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகளிடம் கொள்முதல்செய்யப்படும் பருத்தி யை பாதுகாப்பாக வைக்க இரண்டு இருப்புவைப்பறைகள் தயார் நிலையில் உள்ளது. சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் விற்பனை செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.