எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் அடிப்படை தேவைகளை செய்து தர கோரி பேரூராட்சி உறுப்பினர்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அமைந்துள்ளது.
இந்த பேரூராட்சியில் 15 நகர் மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நகர மன்ற தலைவர் திமுகவை சேர்ந்த பூங்கொடி அலெக்சாண்டர் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
திமுக அதிமுக சுயேச்சை உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது பகுதிகளில் தேவையான அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.
முக்கிய கோரிக்கைகளாக மழைநீர் வடிகாலை சீரமைத்து கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பேரூர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கோரிக்கை விடுத்தார்.
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் அதனை சரி செய்ய நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.நகர மன்ற தலைவர் உடனடியாக அடிப்படைத் தேவைகளுக்கு நிதி ஒதுக்கிடு செய்து செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.