ஆலங்குளம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்புரை யாற்றினார்.
ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் ஆனந்தவல்லி மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்து செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ஆலங்குளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வைத்திலிங்கம் (எ) மானா, ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகனா, ஆலங்குளம் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னி லை வகித்தனர் .
நிகழ்ச்சியில் நீதிமன்ற உதவியாளர் முத்துலிங்கம், நீதிமன்ற
அலுவலக உதவியாளர் முத்துக்குமார்,தன்னார்வலர் சேர்மக்கனி,வழக்கறிஞர்கள்ஷாந்தகுமார், சேர்மராஜ் ,சரவணன், விஜய், ராம்குமார், செல்வ தினேஷ், கார்த்திக், மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர் கள் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி தலைமை ஆசிரியர் அப்துல் காதர் நன்றியுரை கூறினார்.