தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் சங்கம் சார்பில்
கோரிக்கை மனு;-

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து பட்டுப்போன பனை மரங்களுக்கு நிவாரணமாக பனை ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்,தென்காசி மாவட்டம் முழுவதும் மிக மிக வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்

அவரது செய்தி குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் தற்போது மழை இல்லாத காரணங்களால் மாவட்டம் முழுவதும் பனை மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப் போய் கொண்டு இருக்கிறது குறிப்பாக 50 முதல் 60 ஆண்டு காலம் வரை வளர்க்கப்பட்ட பனை மரங்கள் பட்டுப் போகி கொண்டு இருக்கிறது

பனை மரங்கள் பட்டுப்போனால் வறட்சி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள் அதன்படி தற்போது தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அகரக்கட்டு பகுதியில் பனை மரங்கள் அதிக அளவு பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது

இதனால் பனைத் தொழிலாளர்கள் மிகவும் வேதனையோடு இருக்கிறார்கள் மீண்டும் இந்த இடத்தில் பனை விதை வைத்து வளர்த்து பலன் தருவதற்கு சுமார் 25 ஆண்டு காலம் ஆகும்.
அதனால் பட்டுப்போன பனை மரங்களை கணக்கெடுத்து நிவாரணமாக ஒரு பனை மரத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் மேலும் ஆறு குளங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்

மேலும் சிறுதானியங்கள் விவசாயம் செய்த விவசாயிகள் பயிர்கள் கருகி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இப்படி தண்ணீர் இல்லாமல் தென்காசி மாவட்டம் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது

அதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் மிக மிக வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுருந்தது நிகழ்வில் மாநில துணைத் செயலாளர் ஜாண் டேவிட் தென்காசி மாவட்ட தலைவர் ராஜ்நயினார் சாம்பவர்வடகரை கிளை செயலாளர் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *