கந்தரவ கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என அறிவுரை.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறு ,ஏழு , எட்டு வகுப்பு பயிலும் மாணவிகள் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு செல்வதற்கான ஆசிரியர் ,மாணவர் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உதவி தலைமை ஆசிரியர் ஷகிலா தலைமை வகித்தார்.
ஆசிரியர் பாரதிராஜா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட இல்லம் தேடி கல்வி மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையரசன் கலந்து கொண்டு ஆறு, ஏழு ,எட்டு பயிலும் மாணவிகள் தினந்தோறும் மாலையில் நடைபெறும் இல்லம் தேடிக் கல்வி மைய வகுப்பிற்கு செல்ல வேண்டும் எனவும், அங்கு நடைபெறும தமிழ் ,ஆங்கில வாசிப்பு பயிற்சி ,கணித அடிப்படை திறன்கள், அறிவியலில் எளிய சோதனைகள் மூலம் பயிற்சி அழைக்கப்படுகிறது எனவும், அனைத்து மாணவிகளும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தினந்தோறும் வகுப்பிற்கு வருகை தர வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு வருகை தரதா மாணவிகளுக்கு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெறும் கற்பித்தல் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
மாணவிகள் அனைவரும் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர் ஜெயக்குமார் ,சண்முகா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.