எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
வானகிரி மீனவ கிராமத்தில் வெள்ள தடுப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி. மீனவ கிராம மக்களுக்கு பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது குறித்தும் , மீட்பது குறித்தும் ஒத்திகை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கையின் நிலையான வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி மாதிரி ஒத்திகை நிகழ்வு நடந்தது. பேரிடர் மற்றும் வெள்ள காலங்களில் வெள்ளத்திலிருந்து பொதுமக்கள் தங்களைத் தாங்களே எவ்வாறு தற்காத்துக் கொள்வது எனவும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவது எனவும் ஒத்திகை மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கிய வரை மீட்பு குழுவினர் உடனடியாக மீட்டு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதும் செயல் விளக்கம் கிராம மக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. பேரிடர் வெள்ளக் காலங்களில் தயார் நிலையில் மருத்துவக் குழுவினர், மீட்பு குழுவினர் , தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் மக்களுக்கு உதவிட தயார் நிலையில் இருந்திடுவார்கள் என ஒத்திகை நிகழ்வை தொடங்கி வைத்த ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்