கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவச்சிகிச்சை பெற்று வரும் 9 நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 இலட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார். உடன் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.சந்திரசேகர், வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) .ஏ.அப்துல்முனீர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.