பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஜெயங்கொண்டத்தில் மாவட்ட சுகாதார நலப்பணிகள் மற்றும் மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதாரம் சார்பில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு பேரணியை வட்டார மருத்துவ அலுவலர் மரு மேகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி குழுமத்தின் தாளாளர் டாக்டர் த.முத்துக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்.

பேரணியில் அம்மா இங்கே வா வா , தடுப்பூசி அட்டை கொண்டு வா வா, தவறிய தவணை போட்டு, நோயை தூர ஓட்டு, போடுவோம் போடுவோம் தடுப்பூசி போடுவோம், உள்ளிட்ட வாசகங்களை இதில் கலந்துகொண்ட மாணவிகள் கோஷங்கள் எழுப்பிய படி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தொடங்கிய பேரணி அண்ணா சிலை, நான்கு ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் சென்று முடிவடைந்தது.

இந்த பேரணியில் வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், பிரவீன் குமார், விக்ரமன், விமல்ராஜ், முத்து பிரபாகரன் மற்றும் நகர சுகாதார செவிலியர்கள் எழிலரசி, கலைவாணி, சீத்தா மற்றும் சுமார் 200 -க்கும் மேற்பட்ட ஜெயங்கொண்டம் அன்னை தெரேசா செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *