பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் வன்னியர் சங்கம் சார்பில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி 21 தியாகிகளுக்கு அஞ்சலி…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழவீதி கடைவீதியில் பாபநாசம் நகர வன்னியர் சங்கம்,பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டவை சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு
மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செய்து, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராம்குமார்,வன்னியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் வாசுதேவன்,மாவட்ட துணை செயலாளர் அழகேசன்,ஒன்றிய செயலாளர் அறிவழகன்,ஒன்றிய தலைவர் மனோகர்,நகர செயலாளர் சுதந்திரராஜன்,நகர தலைவர் ராமகிரஷ்ணன்,பா.ம.க.முன்னாள் மாவட்ட செயலாளர் தனவந்தராஜன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு உயிரிழந்த தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவியும்,கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும்,முழக்கமிட்டு வீரவணக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர்.