தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடையம் ஒன்றிய குழு சார்பில் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை வகித்தார்.

போராட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாயக சங்க மாவட்ட தலைவர் ஆயிஷாபேகம், தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட துணைத் தலைவர் வேலுமயில், விவசாய சங்கம் சின்னச்சாமி, மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஒன்றிய நிர்வாகி சத்யா மற்றும் புலவனூர், கல்யாணிபுரம், வாகைக்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தென்காசி வட்டாசியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *