திருவாரூர் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சமீபத்தில் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கி இருக்கும் மக்களுக்கு திருவாரூர் மாவட்ட தமிழக முன்னேற்ற கழக கட்சியின் சார்பில் 2500 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்
நிகழ்வின்போது கட்சியின் மாவட்ட செயலாளர் சு கணேஷ் பாண்டியன் தலைவர் சி முருகேஷ் பாண்டியன் உள்பட மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்