தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பௌர்ணமி கிரிவலம் காலையில் இருந்தே அதிக பக்தர்கள் வந்தனர்
கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானத்தை திரு தியாகராஜன்- கல்பனா அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியினை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.