புளியம்பட்டி கிராமத்தில் புதிய ஊராட்சி செயலகம் திறப்பு விழா – கிராம மக்களுக்கு மதிய விருந்தளித்த ஊராட்சி தலைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் புதிய ஊராட்சி செயலகம் ரூ.42 மதிப்பில் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா கண்டது. ஊராட்சி தலைவர் எஸ்.ரங்கநாதன் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். புளியம்பட்டி ஊர் கவுண்டர் விஸ்வநாதன் மற்றும் மணி, மைலம்பட்டி ஊர் கவுண்டர்கள் முனியப்பன், மாதையன், வடமலம்பட்டி ஊர் கவுண்டர்கள் பிரபு, சக்கரை,கெங்கிநாயக்கன்பட்டி ஊர் கவுண்டர் ரங்கநாதன், வசந்தபுரம் ஊர் கவுண்டர் முத்து, இந்திராபுரி ஊர் கவுண்டர் சம்பு, சுண்டகாபட்டி ஊர் கவுண்டர்கள் சண்முகம், முருகன், திப்பனூர் ஊர் மூப்பர்கள் அன்பு, காசி, மு. ஊராட்சி தலைவர் அர்சுணன், மு.கவுன்சிலர் நாகராஜ், ஊ.துணை தலைவர் அம்சவேணி செங்காகவுண்டர், காங்கிரஸ் பிரமுகர் விவேகானந்தன் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புதிய ஊராட்சி செயலகம் திறப்பு விழாவை முன்னிட்டு கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் மதிய விருந்தளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *