விசிக சார்பில் தூத்துக்குடியில் கனமழையினாள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்
தென்மாவட்டங்களில் கனமழை பெருவெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கிட தலைவர் எழுச்சித்தமிழரின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி தென்காசி மண்டலச் செயலாளர் முரசு தமிழப்பன் வேண்டுகோளின்
படி தென்காசி கிழக்கு மாவட்டச் செயலாளர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணப்பொருள்களாக ஆலங்குளம் முன்னாள் ஒன்றிய பொருளாளர் மு.அன்பழகன் மற்றும் வீராணம் முகாம் செயலாளர் ச.திருக்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் வீராணம் வே.சின்னச்சாமி,
பெருமாள் , ரமேஷ், ஆ.ஆனந்தகுமார். ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஐந்து கிலோகிராம் எடை கொண்ட ஐம்பது பைகள் வெள்ள நிவாரணமாக
வீராணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
நிகழ்வில் தென்காசி கிழக்கு மாவட்டச் செயலாளர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முன்னாள் ஆலங்குளம் ஒன்றிய பொருளாளர் மு.அன்பழகன் வீராணம்
ச.திருக்குமார் வே.சின்னச்சாமி ஊத்துமலை
எம்.ஜி. ராஜா ஊத்துமலை வள்ளிக்கண்ணன்
பாப்பாக்குடி ஒன்றியச் செயலாளர் வேல்முருகன், சுரண்டை விஜய், மற்றும் குமார், அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மு.செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.