தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட கிளை மற்றும் மதுரை மாவட்ட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆல்வை ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கப்பழங்கரை, பூந்தோட்டம், திருத்துக்காரவிளை ஆகிய கிராமங்களை பார்வையிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ3 லட்சம் மதிப்பிலான அரிசி, துவரம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, சீனி, எண்ணெய், பிஸ்கட், சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, குழம்பு மசால் பொடி அடங்கிய நிவாரண தொகுப்பானது 300 குடும்பங்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்ட தலைவர் முருகேசன் நேரடியாக வழங்கினார்.

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பர்வராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மயில், மாநில தலைவர்
மணிமேகலை, மாநில செயலாளர்.பிரம்ம நாயகம், மதுரை மாவட்ட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாண்டி, மதுரை மாவட்ட ஜாக்டோ ஜியோ முன்னாள் ஒருங்கிணைப்பாளர்.

சந்திரன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை மாவட்டத்தலைவர் கணேசன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன், கல்வி மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் எமிமால் ஞானசெல்வி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கலை உடையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மற்றும் பரணி பாபு, சிவகுமார், தீபக், உமாராணி, கணேசன், மணிமேகலை, குமார், ஜோசப் ஜெயசீலன், ஜெயமுருகன், நாராயணன், ஞானசேகரன், ராமசாமி, கார்த்திகேயன் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *