மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியில் ஊராட்சியில் வள்ளியம்மை தெய்வானையம்மை சமேத வேலவன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக கடந்த இரண்டு நாட்களாக யாகசாலை பூஜை நடைபெற்றது .அழகர் மலை நூபுர கங்கை, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களிலிருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தங்கள் அடங்கிய கலசத்திற்கு பல்வேறு பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் கோவில் மீது உள்ள வேலவன் சுவாமி சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின்னர் சன்னதியில் உள்ள வேலுக்கு பால் பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களாலும் பல்வேறு வண்ண மலர்களாலும் அர்ச்சனை செய்யப்பட்டது .தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்த விழா ஏற்பாடுகளை வேலவன் கோவில் நிர்வாகிகள் மற்றும் முடுவார்பட்டி கிராம முருக பக்தர்கள் செய்திருந்தனர்.