எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்க குவிந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று தொடங்கியது. கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற முகாமில மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் முன்னிலை வகித்தனர்.
முகாமினை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை | மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை,கூட்டுறவுத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு 15நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதனால் முதல் நாளில் 4 வார்டுகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பலர். ஆர்வமாக பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்