வலங்கைமான் பகுதியில் சிவன் ஆலயங்களில் பவுர்ணமி, திருவாதிரை விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயம், ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் ஆகியவற்றில், நேற்று பௌர்ணமி மற்றும் திருவாதிரை முன்னிட்டு, மாலை சுவாமி அம்பாள் சிறப்பு அபிஷேகஆராதனையும், அதனைத் தொடர்ந்து நடராஜர் சிவகாமி அம்பாள் சிறப்பு மகா அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இன்று காலை நடராஜர் சிவகாமி அம்பாள் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், விழா ஏற்பாடுகளை அந்தந்த ஆலயங்களும், பக்தர்களும் மிகவும் சிறப்பாக செய்து இருந்தனர்.