பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் பகுதி கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் சுவாமி வீதி உலா ….

திரளான பக்தர்கள் பங்கேற்பு ..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்கம் சுவாமி திருக்கோயில், திருப்பாலைத்துறை பாலை வனநாதர் திருக்கோயில் , நல்லூர் கல்யாண சுந்தரேஷ்வரர் திருக்கோயில் ஆகிய கோவில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

அது சமயம் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு சிறப்பு மலர் அலங்காரம் மகாதீபாரதனை நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி சுந்தரியுடன் நடராஜ பெருமான் கோவிலை வலம் வந்து முக்கிய வீதிகளில் வீதி உலா சென்றது.

சிவகாமி சுந்தரியுடன் நடராஜப் பெருமான் பக்தர்களுக்கு ஒரே இடத்தில் காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள், மேலாளர்கள் ,கோவில் எழுத்தர்கள், குருக்கள்கள், பட்டாசாரியர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *