கும்பகோணம் வேளாண்மைத்துறை அட்மா திட்டம் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்.

கும்பகோணம் வேளாண்மைத் துறையில் இயங்கி வரும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை தொழில்நுட்பக் குழு மற்றும் வட்டார விவசாயிகள் அட்மா திட்டத்தின் வட்டார ஆலோசனைக் குழு கூட்டம் கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் கூட்ட அரங்கில் வட்டாரக் குழு ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை உதவி இயக்குநர் தேவிகலாவதி தலைமையில் நடைபெற்றது.

பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ் பேசுகையில், கும்பகோணம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை, தீவன மேலாண்மை,அறுவடை பின் தொழில்நுட்ப பயிற்சி, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, தொடர்பான பயிற்சிகள், செயல்விளக்கங்கள், உள்மாவட்டளவில் மற்றும் வெளிமாவட்டங்களில் நடத்தப்படும் பயிற்சிகள் மற்றும் கண்டறிதல் சுற்றுலா போன்ற திட்டங்களுக்கு அனைத்து விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் குமார், வேளாண்மை அலுவலர் அசோக்ராஜ்,
கால்நடை உதவி மருத்துவர் சுதாரோஸ் உதவி பொறியாளர் சங்கீதா,வேளாண்மை பொறியியல் துறை அருள்தாஸ்,உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை துறை. மற்றும் விவசாயிகள் வட்டார ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அட்மா திட்ட வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் .இளமதி ஏற்பாடு செய்தியிருந்தார்.
முடிவில் ஆத்மா திட்ட வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் தனசேகரன் கலந்து கொண்டு அனைத்து வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *