தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் மாநகர காங்கிரஸ் தலைவர் மிர்ஸாவூதின் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அண்ணன் டி.ஆர்.லோகநாதன் காங்கிரஸ் கட்சி கொடியேற்றி வைத்து கட்சியின் கொள்கை பற்றி கருத்துறை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநகர பொருளாளர் தியாகராஜன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில் நாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் சேகர் நெல்சன் தாராசுரம் பழனி.சாதிக், சீனுவாசன், சுந்தர்ராஜன், கார்த்திக், சரவணன் மாரியப்பன் செல்வராஜ்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தே.மு தி.க தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான விஜயகாந்த்க்கு மாவட்ட காங்கிரஸ் மாநகர காங்கிரஸ் சார்பில் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *