வலங்கைமானில் தமிழ்நாடுஓய்வு பெற்ற அலுவலர்கள்36-ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் 36 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை விகித்தார்,

சங்க செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் மருதசுந்தரம், தணிக்கையாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னதாக உதவி செயலாளர் பெருமாள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மன்னார்குடி சங்கத் தலைவர் ராஜகோபாலன், நன்னிலம் சங்கத் தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் பழைய ஓய்வு திட்டத்தை திரும்ப அமல்படுத்த வேண்டும்.

ஓய்வூதியக்காரர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர், கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *