கொ‌ஞ்சிமங்கலம் வருவாய் கிராமத்திற்கு ,15 ஆண்டாக விஏஒ அலுவலக கட்டடம் இல்லாது அவலநிலையில் அதிகாரிகள் பணியாற்றி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வானூர் தாலுக்கா கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் வருவாய் கிராமத்திற்கு கடந்த 15 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட விஏஒ அலுவலக கட்டடம் இடிந்து பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த பதிணைந்து வருடமாக ஊராட்சிக்கு சொந்தமானது சிறிய அறை கொண்ட பழைய இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தில் தற்போது வரை செயல்படுகிறது. மழை காலங்களில் வருவாய் கணக்கு ஆவணங்கள் ஒழுகும் மழைநீரில் நனைந்து சேதம் ஏற்படுகிறது.

எனவே கொஞ்சிமங்கலம் கிராமத்திற்கு புதிய விஏஒ கட்டடம் கட்டிதர மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *